Monday, 13 January 2020

*மரகதலிங்கம் உத்திரகோசமங்கை*


வருடம் பூரா சந்தனக் காப்பு.
அபிஷேகம் மரகத நடராசருக்கு ஆண்டுக்கு ஒரு நாளே !
அது மார்கழி மாதம் வரும் மிருகசீஷ நட்சத்திரத் திருநாளைக்கு.
அடுத்தநாள் திருவாதிரை புதுச் சந்தனக் காப்பு சாற்றப் படும்.
நிறையப் பேர் இப்படித்தான் ஆருத்திரா தரிசனம் எனக் காலண்டரில் பார்த்து
நடராசரை சந்தனக் காப்பு களைந்த திருக்கோலத்தில்
காணமுடியாமல் போயிற்றே என ஏமாற்றம் அடைகிறார்கள்…

ஒருநாள் முன்னே வரவேண்டுமா, தெரியாது போயிற்றே
என ஆதங்கப் பட்டுச் செல்வோர்களை ;
நிறையவே பார்த்திருக்கிறேன்
களைந்த திருக்கோலத்தில் காண நீங்கள் வரவேண்டிய நாள் திருவாதிரைக்கு முதல் நாள்…
திருவாதிரை அல்ல…!
இப்படி நடராசப் பெம்மானின் அபிஷேகம் காணஇயலாமல்
அடுத்த நாள் அறியாமல் வந்து ஏமாறாமல் இருக்க
இருக்கவே இருக்கிறது இங்கு தினம் தினம் மதியம் 12;45க்கு
நடக்கும் மரகதலிங்க அபிஷேகமும், ஸ்படிக லிங்க அபிஷேகமும்……
கோவிலின் உள் வாயிலிலேயே அபிஷேகப் பொருட்கள் என்று கேட்டால் தருவார்கள்.
உங்கள் சார்பில் இனிதே நடக்கும் அபிஷேகம்
அருகே அமர்ந்து அருமையாக தரிசிக்கலாம்…
இதில் மரகத லிங்கம் மரகத நடராசரையும்
ஸ்படிக லிங்கம் மங்களேச்சுவரரையும் குறிக்கிறது
இங்கு இறவா நிலை பெற்று அமர்ந்துள்ள மணிவாசகரே
இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்வதாக ஐதீகம்.
அதனால்தான் மணிவாசகரின் இராஜகோலச் சிலை,
மரகதலிங்கம் அபிஷேகம் செய்யும் இடம், உமா மகேச்சுவர சன்னசி
மூன்றும் நேர்கோட்டில் உள்ளன.
நிகழ்ச்சி முடிவில் அபிஷேக தீர்த்தம்
பக்தர்கள் சிரம் மீது தெளிக்கப் படும்….
இதில் சகல பாவங்களும் கழுவப் படுவதாய் பக்தர்களின் நம்பிக்கை
பிணி பீடை தீருவதாய் சிலரது எண்ணம்….

No comments:

Post a Comment